45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?


தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு, 2006ல், தி.மு.க., ஆட்சியில், காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 2003 - 06 வரையிலான பணிக்காலம், பணி முறிவாக அறிவிக்கப்பட்டது.இதனால், இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கு, ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைக்கவில்லை; பணிக்காலத்தை இழந்தனர்; பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது.பணி வரன்முறை கோரி, பல ஆசிரியர் அமைப்புகள், அரசுக்கு, 10 ஆண்டுகளாக மனு கொடுத்தன.தமிழக முதல்வராக, மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்றதும், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, 2003 - 06ல், பணி வரன்முறை பெறாத ஆசிரியர்களின் பணிமுறிவுக் காலம் மற்றும் அதற்கான ஊதிய செலவு பட்டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர் கூறுகையில், ''இந்த முடிவால், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணிக்காலம் கிடைப்பதுடன், அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க, கூடுதல் வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.

1 comment:

  1. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி