எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு


எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.மனுவில்,
எனது மகள் காவ்யா, 2014 இல் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்றார். அவருக்கு தமிழ் 2 ஆம் தாளில் 87 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தன. தமிழில் மட்டும் மதிப்பெண் குறைந்ததால் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தேன். மதிப்பெண் கூட்டலில் தவறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறியும் சட்டத்தின் கீழ் விடைத்தாள் நகல் பெற்றேன். அதை பார்த்த போது, தமிழில் முழு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டிய 7 கேள்விகளுக்கு மதிப்பெண் குறைவாக அளிக்கப்பட்டு இருந்தது. எனவே மதிப்பெண் அளிக்கப்பட்டதில் தவறு நடந்துள்ளது.ஆனால் மறு மதிப்பீடு செய்யக்கோரிய மனுவை தேர்வுத்துறை ஏற்கவில்லை. எனது மகள்பள்ளியில் அனைத்து பாடங்களிலும் முதலிடத்தில் இருந்தார். பள்ளியில் 490 மதிப்பெண் பெற்றவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தவறான மதிப்பீடு காரணமாக இந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவேஎனது மகளின் தமிழ் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய அரசுத்தேர்வுத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு கூட்டலுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மறு மதிப்பீடு செய்யும் முறை கிடையாது. மதிப்பெண் கூட்டலில் தவறு இருந்தால் சரி செய்து கொள்வதற்காகவே மனுதாரருக்கு விடைத்தாள் நகல் அளிக்கப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

விடைத்தாளில் அனைத்து கேள்விகளும் திருத்தப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கூறுவதுபோல், சில கேள்விகளுக்கு குறைவான மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தாலும், அவை முழு மதிப்பெண் அளிக்கத் தகுதியானவை எனக் கூறுவதை ஏற்க முடியாது. மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு செய்யும் முறையும் இல்லை. மறு மதிப்பீடுசெய்யுமாறு அதிகாரிகளை வற்புறுத்த முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் இது போன்று ஏராளமானோர் நீதிமன்றத்தை நாடி வரக்கூடும். தேர்வு நடத்துவதன் நோக்கத்தை அது பாதிக்கும் என்பதால் மனுதாரருக்கு பரிகாரம் அளிக்க இயலாது எனக்குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி