மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிரதமர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளதுஇத்தி்டத்தை பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் தனியார் நிறுவனங்களும் வழங்க வேண்டியுள்ளது.
ஆனால் ஐசிசிஐ,லொம்பார்ட் , பஜாஜ் அலையன்ஸ் , ரிலையன்ஸ் ஜெனரல் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இந்த காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளன. எஸ்பிஐ,எஸ்டிஎப்சி உள்ளிட்ட சில நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேரப் போவதில்லை என தெரிவித்துள்ளன.மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்தார்.
ஒவ்வொரு காப்பீட்டு பாலிஸியை நிர்வகிக்க 2 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பதால் இது லாபகரமானதாக இருக்காது என தனியார் நிறுவனங்கள் கருதுவதாக கூறப்படுகிறது.ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீட்டை பெற முடியும் என்ற திட்டத்தை இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி