இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதில் சேர இந்த ஆண்டு 3500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஆன்லைனில்மாவட்ட அளவில் நடத்தப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 அன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி