டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர் களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து
கலந்தாய்வு செயலாளரும், அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வருமான அ. மாலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக1 லட்சத்து 16 ஆயிரத்து 234 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 34 மையங்களில் மே 12-ம் தேதி முதல் விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட்டன. இதில் 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது www.accet.co.in என்கிற கல்லூரி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 26-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ம் தேதி மாலை நிறைவடைகிறது.
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். பி.எஸ்சி., கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, இந்த ஆண்டு பி.எஸ்சி-யில் கணிதம் படிக்காதவர்கள் பிளஸ் 2-வில் கணிதம் படித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார்.
இது குறித்து
கலந்தாய்வு செயலாளரும், அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வருமான அ. மாலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக1 லட்சத்து 16 ஆயிரத்து 234 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 34 மையங்களில் மே 12-ம் தேதி முதல் விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட்டன. இதில் 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது www.accet.co.in என்கிற கல்லூரி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 26-ம் தேதி தொடங்கி ஜூலை 9-ம் தேதி மாலை நிறைவடைகிறது.
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். பி.எஸ்சி., கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, இந்த ஆண்டு பி.எஸ்சி-யில் கணிதம் படிக்காதவர்கள் பிளஸ் 2-வில் கணிதம் படித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி