பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகம், அதன் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஏப்ரல்-மே பருவத்துக்கான பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.


அதேபோல், சிறப்புத் துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்குத் தகுதியுள்ள மாணவர்கள் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.ஆர்.கிளாடிஸ் லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி