பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனை

கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது.
தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.இதற்காக பி.எட்., கல்லுாரிகளில் அமல்படுத்தவேண்டிய புதிய நடைமுறைகளை விளக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவந்தர் ஜி.விஸ்வநாதன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.நேற்று நெல்லை ஜான்ஸ் கல்லுாரியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் பல்கலையின் பதிவாளர் கலைச்செல்வன், தேர்வாணையர் மணிவண்ணன் ஆகியோர் இருந்தனர்.

கூட்டத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்வியியல் கல்லுாரிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்..புதிய விதிமுறைகள் குறித்து துணைவேந்தர் பேசியதாவது;பி.எட்., முதலாம் ஆண்டில்9 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 7 பாடங்களும் இருக்கவேண்டும். எம்.எட்., வகுப்புகளில் ஒவ்வொருஆண்டிலும் 6 பாடங்கள் இருக்கவேண்டும். செய்முறைப்பயிற்சி 40 நாட்களில் இருந்து 100நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி