ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேர்சேர்ந்தனர்.ஐந்து ஆண்டு, 'ஹானர்ஸ்' படிப்பில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., ஆகியவற்றுடன் எல்.எல்.பி., படிக்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதே போல், அரசு சட்டக் கல்லுாரிகளின் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்புக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்பில், 1,052 இடங்களுக்கு, 4,500 பேர் விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.

பல்கலை வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில், 'ஹானர்ஸ்' படிக்க, 2,500 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களில், 'ஹானர்ஸ்' படிப்புக்கு மட்டும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்,இன வாரியாக தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, 431 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியலும் அறிவிக்கப் பட்டது.தேர்வானவர்களுக்கான கவுன்சிலிங், பல்கலைவளாகத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக கல்லுாரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ளவர்களுக்கு இன்றும், நாளையும் கவுன்சிலிங் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி