'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2015

'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்

தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் குறைகளை தீர்க்க 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் திட்டம்' மதுரை மண்டல அலுவலகத்தில் ஜூலை முதல் துவக்கப்படுகிறது.
தொழிலாளர் குறைகளை தீர்க்க வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 'பவிஷ்ய நிதி அதாலத்' நடத்தப்பட்டது.

நிறுவனத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்களும் முக்கிய பங்கீட்டாளர்களாக உள்ளனர். தொழிலாளர் மட்டுமின்றி உரிமையாளர்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, மத்திய வருங்கால வைப்புநிதி கமிஷனர், பவிஷ்ய நிதி அதாலத்தை 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.இதில் தொழிலாளர்கள்,முதலாளிகள் குறைகளுடன் கருத்துக்களை தெரிவிக்கலாம். மதுரை மண்டல அலுவலகத்தில் 2015 ஜூலை முதல் இத்திட்டம் துவக்கப்படுகிறது. மாதம்தோறும் 10ம் தேதியில் (அன்று விடுமுறை என்றால் மறுநாள்) முகாம் நடக்கும்.

அன்று காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர்கள்; மதியம் 3 முதல் மாலை 4 மணி வரை முதலாளிகள்; மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம். தொழிலாளர்கள், முதலாளிகள் கருத்துக்களை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி