அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல் பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் சு.முத்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஏற்கனவே அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இத்தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கருவூல அலுவலர், அரசு ஊழியர்கள் மாத சம்பளம்பெறுவதற்கு ஆதார் எண்ணையும் அளித்தால் தான் சம்பள பட்டியலை பெற்றுக் கொள்வோம் என கட்டாயப்படுத்தி வருகிறார்.இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மாவட்ட கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், அதற்கு மாவட்ட கருவூல அலுவலர் வெளியூர் சென்றிருப்பதாக கூறி பதில் அளிக்க மறுத்து வருகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் மாவட்ட கருவூல அலுவலரும், கூடுதல் மாவட்ட கருவூல அலுவலரும் அலுவலகத்தில் தான் இருந்துள்ள விவரத்தையும் அறிந்து கொண்டோம். இதுபோன்ற செயல் உண்மையான கண்டனத்திற்குரியது என்றும், இதை அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கிறோம். எனவே அரசு ஊழியர்களிடம் உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கும் மாவட்ட கருவூல அலுவலகத்தை கண்டித்து வருகிற 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இத்தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கருவூல அலுவலர், அரசு ஊழியர்கள் மாத சம்பளம்பெறுவதற்கு ஆதார் எண்ணையும் அளித்தால் தான் சம்பள பட்டியலை பெற்றுக் கொள்வோம் என கட்டாயப்படுத்தி வருகிறார்.இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மாவட்ட கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், அதற்கு மாவட்ட கருவூல அலுவலர் வெளியூர் சென்றிருப்பதாக கூறி பதில் அளிக்க மறுத்து வருகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் மாவட்ட கருவூல அலுவலரும், கூடுதல் மாவட்ட கருவூல அலுவலரும் அலுவலகத்தில் தான் இருந்துள்ள விவரத்தையும் அறிந்து கொண்டோம். இதுபோன்ற செயல் உண்மையான கண்டனத்திற்குரியது என்றும், இதை அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கிறோம். எனவே அரசு ஊழியர்களிடம் உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கும் மாவட்ட கருவூல அலுவலகத்தை கண்டித்து வருகிற 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி