மாணவர் விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

மாணவர் விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இந்த மாவட்டத்தில் உள்ள பி.சி. மற்றும் எம்.பி.சி. மாணவ-மாணவியர் விடுதிகளில் சேர நாளைக்குள் (26-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையின மாணவர்-மாணவிகள்தங்கி கல்வி பயிலும் வகையில், 19 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 17 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களும், அரசு கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் பயிலும் மாணவர்களும் சேர தகுதி யுடையவர்களாவர். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம்ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும், கல்வி நிலை யத்துக்குமான தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ- மாணவியர் நாளைக்குள் (26-ம் தேதி) மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம் அல்லதுசம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி