இன்று சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடியில் நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2015

இன்று சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடியில் நடக்கிறது

சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் உதவி பேராசிரியர் பணியில் சேர
வேண்டுமானால் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு நடத்துகிற “நெட்” தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் யுஜிசி நெட் தேர்வைப் போன்றே ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலாவதுநெட் தகுதித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றொரு தேர்வும் நடைபெறும் என்று சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி