கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2015

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 156 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டது. மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 617 இடங்களுக்
கு ஜூன் 15 ஆம்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் 19 பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.இதையடுத்து இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 26 ஆம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் எம்.கோவிந்தராஜ் கூறியது: கட்டாய இலவசக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மதுரையில் பெரும்பாலான பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது.

குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளில் நவம்பர் மாதம் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதில் 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அந்த பள்ளிகளில் ஜூன் 26 ஆம் தேதி குழுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரிக்பள்ளிகளின் காலியிடங்கள் குறித்த விபரங்கள் ஜூன் 27 ஆம் தேதி கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி