பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு ஆக., 1ல் 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ம் தேதி நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி களில், பி.இ., - பி.டெக்., படிப்பு களுக்கான பொது கவுன்சிலிங், நாளை முடிகிறது.மொத்தமுள்ள, 2 லட்சத்து, 5,000 இடங்களில், நேற்று வரை, 94 ஆயிரம் இடங்கள் நிரம்பின.


தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. அது முடிந்து, காலியாக இருக்கும் இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 1ல் நடத்தப்படுகிறது.பிளஸ் 2 துணைத் தேர்வில், வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள், இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அனைத்து சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை, 'https://tnea.annauniv.edu/tnea2015/press.php' என்ற, அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி