இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு கலந்தாய்வு நிறைவு: 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு கலந்தாய்வு நிறைவு: 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (சனிக் கிழமை) முடிவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் (தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு) சேர 3,500-க் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 2,760 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.பயிற்சி பள்ளியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு சனிக்கிழமை முடிவடைந்தது. கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் 1,510 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி