எண் மாறாமல் ஃபோன் நிறுவனம் மாறும் வசதி: நாடு முழுவதும் 3ம் தேதி அமலாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

எண் மாறாமல் ஃபோன் நிறுவனம் மாறும் வசதி: நாடு முழுவதும் 3ம் தேதி அமலாகிறது

செல்ஃபோன் எண்ணை மாற்றாமல், சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் நாளை மறுநாள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதை டெல்லியில் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் செல்ஃபோன் எண் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது. இதை மாநிலம் விட்டு மாநிலம் சென்றாலும் பெறும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இதன்படி, 3ம் தேதி முதல் கன்னியாக்குமரியில் இருந்து ஒருவர் காஷ்மீருக்குச் சென்றாலும் தனது செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ள முடியும்.இந்த வசதியை கடந்த மே மாதம் 3ம் தேதியே அமல்படுத்த அரசு திட்டமிருந்த நிலையில், தொலைபேசி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அவகாசம் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி