பொறியியல் சேர்க்கை துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 31-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்ய வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எஸ்.சி.ஏ. இடங்களை நிரப்ப...: இதுபோல, பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாத எஸ்.சி.ஏ. இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட இன (எஸ்.சி.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.விருப்பமுள்ள எஸ்.சி. மாணவர்கள் அன்றையதினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை வருகையைப் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, www.annauniv.edu இணையதளத்தைக் காணலாம்.
பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 31-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்ய வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எஸ்.சி.ஏ. இடங்களை நிரப்ப...: இதுபோல, பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாத எஸ்.சி.ஏ. இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட இன (எஸ்.சி.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.விருப்பமுள்ள எஸ்.சி. மாணவர்கள் அன்றையதினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை வருகையைப் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, www.annauniv.edu இணையதளத்தைக் காணலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி