ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில்பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுஆலோசித்து வருகிறது.


இந்த நிபந்தனை குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் அதில்விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மேலும் இதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களையும் அவை அறிவித்துள்ளன. இந்த நிலையில், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நிபந்தனையை குறைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிபந்தனைக் காலம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு அட்டவணை தேதியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நிபந்தனை தொடர்பாக முடிவு எடுத்த பிறகு, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

2 comments:

  1. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
  2. 1.9.14 appointment aanavanga transfer apply pannalama.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி