மொபைல் எண் மாறாமல் நிறுவனம் மாறலாம்: தேசிய அளவில் இன்று முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2015

மொபைல் எண் மாறாமல் நிறுவனம் மாறலாம்: தேசிய அளவில் இன்று முதல் அமல்

மொபைல் ஃபோன் எண்ணை மாற்றாமல் அச்சேவையை தரும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.இதன்படி
மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் தங்கள் பழைய எண்ணையே தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயம் விருப்பமான மொபைல் ஃபோன் சேவை நிறுவனத்தின் சேவைக்கும் மாறிக் கொள்ள முடியும்.

இச்சேவையை ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா பிஎஸ்என்எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன.மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனம் மட்டும் மாற்றும் சேவையை தேசிய அளவில் வழங்க இன்று வரை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு கெடு விதித்திருந்தது.இச்சேவை தொலைத்தொடர்பு மண்டல அளவில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் வழங்கப்படுகிறது​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி