சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2015

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்

சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர்.


இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், 418 பேர்; சமச்சீர் கல்வியில் பயின்றவர்கள், 33 பேர். ஆந்திராவில், 3,204 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தில், சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்துள்ளதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்.

கடந்த, 11 ஆண்டுகளாக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படாமல் உள்ளது. இதனால், தமிழகத்தில், கல்வித் தரம் குறைந்து வருகிறது.தனியார் பள்ளிகளுக்கான நில அளவையை குறைக்க வேண்டும்.l10 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.பள்ளி வாகனங்களுக்கான போக்குவரத்து விதிகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி