வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குஉதவித் தொகை வழங்கி வருகிறது.
இதன்படி, மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல்பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.தனியார், சுய வேலைவாய்ப்புகள் இல்லாமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்குள் இருந்து, அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகள் பெற்றுள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம்.மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி மையத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுவிண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருப்போர், சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனம் தொழில் திறனற்றோர்க்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பித்து, ஒராண்டு முடிந்தவர்கள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குஉதவித் தொகை வழங்கி வருகிறது.
இதன்படி, மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல்பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.தனியார், சுய வேலைவாய்ப்புகள் இல்லாமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்குள் இருந்து, அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகள் பெற்றுள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம்.மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி மையத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுவிண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருப்போர், சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனம் தொழில் திறனற்றோர்க்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பித்து, ஒராண்டு முடிந்தவர்கள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி