பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு:புதிய திட்டம் இன்று அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு:புதிய திட்டம் இன்று அறிமுகம்

பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல், ஈவ் டீசிங் போன்ற தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் பள்ளிகளில் தங்களுக்கு ஏற்படும் ஈவ் டீசிங், பாலியல் போன்ற தொல்லைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புகார்களை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ள மாணவிகள் தொடர்ந்து கல்வி கற்கும் சூழலிலிருந்து விலகி செல்லும் நிலை ஏற்படுகிறது.பள்ளிகளில் தீண்டாமை போன்ற கொடுமைகளால் மாணவர், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகநேரிடுகிறது. இதுபோன்ற சூழலில் இருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.முதல் கட்டமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகவரியுடன் கூடிய அஞ்சல் அட்டை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் போன்ற தொல்லைகள் குறித்து அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம்.அவ்வாறு புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திங்கள்கிழமை இத்திட்டத்தை எஸ்.பி. வி. விக்ரமன், கங்கைகொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு அஞ்சல் அட்டை வழங்கும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி