விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


ராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் எலிசபெத் மனுஇம்மருத்துவமனை மகப்பேறு பிரிவின் தலைமை டாக்டராக உள்ளேன். 2017 வரை பணிக்காலம் உள்ளது. உடல் நிலை சரி இல்லாததால் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன்.இதற்கு சுகாதாரத்துறை செயலர் மறுத்துவிட்டார். கட்டாயப்படுத்தாமல் விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'மனுதாரருக்கு பணிக்காலம் 2017ம் ஆண்டு வரை உள்ளது. அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்துவிட்டு திடீரென பணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதைஏற்க முடியாது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மனுதாரர் முக்கியப் பணியில் இருந்தாலும்கூட சிகிச்சை அளிக்கும் மனநிலையில் இல்லாதது தெரிகிறது. அவரை கட்டாயப்படுத்துவது தவறு. கேலிக்கூத்தாகும். அரசு விதிப்படி முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் விருப்பஓய்வு பெற முடியாது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி பெறுவதற்கான விதிமுறை இல்லை. இதனால் நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது. அப்பணியில் வேறு ஒருவரை நியமிக்கலாம். ஆனால் மனுதாரர் விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி