தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இந்தகல்வியாண்டுக்குள் நிரப்பவேண்டும் அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இந்தகல்வியாண்டுக்குள் நிரப்பவேண்டும் அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது.
இந்த பணியிடங்களை தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகள் 1976–ன் படி நிரப்ப தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று ஐகோர்ட்டில் ஓய்வுப் பெற்ற பேராசியர் ஐ.இளங்கோவன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ‘இந்த வழக்கிற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவுகளில் ஆசிரியர்கள் பணியில் 213 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியில் 111 காலிப் பணியிடங்களும் உள்ளன.

இது தவிர, அனைத்துப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் பணியில் 1478 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாதப் பணியிடங்களில் 1673 பணியிடங்களும் காலியாக உள்ளன என்று கூறியுள்ளது. எனவே, காலியாக உள்ள இந்த பணியிடங்கள் அனைத்தையும் இந்தக் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்‘ என்று உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி