விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர்நலத் துறை சார்பில், அரசின் 28 விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில தேர்வு நாளை (ஜூலை 3) காலை 8 மணிக்கு நடத்தப்படுகிறது. தேர்வு நடைபெறும் இடங்கள்:ரேஸ்கோர்ஸ், மதுரை:
ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தடகளம், ேஹண்ட்பால், டெனிகாய்ட், இறகுபந்து மற்றும் நீச்சல் விளையாட்டு, பிளஸ் 1 மாணவர்களுக்கான கூடைபந்து விளையாட்டு. ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவி களுக்கான தடகளம், இறகுபந்து, ஹண்ட்பால்,வாலிபால், டெனிகாய்ட், கபடி தேர்வு. சீதக்காதி சேதுபதி அரங்கு, கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு கிரிக்கெட் தேர்வு. அன்னை சத்யா அரங்கு, கணபதி நகர், தஞ்சாவூர்: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவிகளுக்கு பளுதுாக்குதல் தேர்வு.

நேரு விளையாட்டு அரங்கு, சென்னை: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1மாணவ, மாணவிகளுக்கு வாள்சண்டை தேர்வு.விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வு நாளன்று ரூ.10கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட விளையாட்டுஅலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி