இன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

இன்று எம்.சி.ஏ., பொதுப்பிரிவு கலந்தாய்வு

எம்.சி.ஏ., படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.

தமிழகத்தில், 160 இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், 126 கலை அறிவியல் கல்லூரிகளிலும்
எம்.சி.ஏ., பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இக்கலந்தாய்வுக்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி, மாநில கலந்தாய்வு மையமாகும். முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

இதில், ஒரு மாணவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததால், எளிதாக விரும்பிய கல்லுாரியை தேர்வு செய்தார். முதல் நாளான நேற்று கலந்தாய்வு பணிகள் காலை 10:00 மணிக்கே முடிவுபெற்றது. இன்று பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் பங்கேற்கின்றனர்.இக்கலந்தாய்வு, வரும், 31ம் தேதி வரை நடக்கவுள்ளது. பொதுப்பிரிவில், 3,112 மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று, பொதுப்பிரிவில், 613 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில், பங்கேற்க வரும் மாணவர்கள் போதிய சான்றிதழ்களை தவறாமல் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி