பள்ளிச் சீருடைகளை தரமாகத் தைக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

பள்ளிச் சீருடைகளை தரமாகத் தைக்க வேண்டும்

பள்ளிச் சீருடைகளை தரமானதாக தைத்து வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார்.சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 மகளிர் தையல் கூட்டுறவுச் சங்கங்களில் தமிழக அரசு வழங்கும் இலவச பள்ளிச் சீருடைகள் தைக்கப்படுகின்றன.
இங்கு தைக்கப்பட்ட சீருடைகள் 2015-16ஆம் ஆண்டில் முதல்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிமாணவ, மாணவிகளுக்கு இரு இணை விலையில்லா சீருடைகள் மே 30-ஆம் தேதிக்குள்தைத்து வழங்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக, மாணவ, மாணவிகளுக்கு ஒரு இணை சீருடை வீதம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 379 செட் இணை சீருடைகள் இதுவரை தைத்து வழங்கப்பட்டுள்ளன.இப்போது, மூன்றாம் கட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான சீருடைகள் தைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

இந்தப் பணியில் திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில் 1,600 உறுப்பினர்கள், வந்தவாசி அன்னை சத்யா தையல் மகளிர் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் 1,100 உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், தைக்கப்படும் சீருடைகள் தரமானதாக உள்ளதா? என்பதை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, சீருடைகள் தரமானதாக தைத்து வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி