இந்திய கலாசாரத் துறை சார்பில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில், தேசிய அறிவியல் நாடக விழாவை,ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான விழா, ஜனவரி மாதம்கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, மண்டல வாரியாக, முதல் இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்படும்.
தென்மாநில பள்ளிகளை தேர்வு செய்ய, விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில், தென்னிந்திய அறிவியல் நாடக விழா,வரும் நவம்பரில் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து அறிவியல் நாடகம் நடத்துவதில், சிறந்த இரண்டு பள்ளிக் குழுக்கள் அனுப்பப்பட உள்ளன. இந்தக் குழுக்களைத் தேர்வு செய்ய, அனைத்து அரசு பள்ளிகளிலும், அறிவியல் நாடகப்போட்டி நடத்தஉத்தரவிடப்பட்டு உள்ளது.பள்ளி அளவில் ஆக., 18, கல்வி மாவட்ட அளவில் ஆக., 19, வருவாய் மாவட்ட அளவில் ஆக., 21, மாநில அளவில்,ஆக., 25 ஆகிய தேதிகளில், போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.'அறிவியலும், சமூகமும்' என்ற தலைப்பின் கீழ், பல்வேறு தலைப்புகளில், 30 நிமிடங்களில் முடியும் வகையில், நாடகங்களை நடத்தி, குழுக்களைத் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மாநில பள்ளிகளை தேர்வு செய்ய, விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில், தென்னிந்திய அறிவியல் நாடக விழா,வரும் நவம்பரில் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து அறிவியல் நாடகம் நடத்துவதில், சிறந்த இரண்டு பள்ளிக் குழுக்கள் அனுப்பப்பட உள்ளன. இந்தக் குழுக்களைத் தேர்வு செய்ய, அனைத்து அரசு பள்ளிகளிலும், அறிவியல் நாடகப்போட்டி நடத்தஉத்தரவிடப்பட்டு உள்ளது.பள்ளி அளவில் ஆக., 18, கல்வி மாவட்ட அளவில் ஆக., 19, வருவாய் மாவட்ட அளவில் ஆக., 21, மாநில அளவில்,ஆக., 25 ஆகிய தேதிகளில், போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.'அறிவியலும், சமூகமும்' என்ற தலைப்பின் கீழ், பல்வேறு தலைப்புகளில், 30 நிமிடங்களில் முடியும் வகையில், நாடகங்களை நடத்தி, குழுக்களைத் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி