அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்
.தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் மண்டல அளவிலான அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம்ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பி.எட். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், அதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, ஆராய்ச்சிப் படிப்பில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 10 புதிய துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 170 மாணவ, மாணவியர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் எம்.எட்., ஒருங்கிணைந்த பி.எட். பட்டப்படிப்பு தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டயப் படிப்புகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பி.எட். படிப்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பி.ஏ.பி.எட், பி.எஸ்சி. பிஎட் பயில முடியும்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பி.எட். பட்டப் படிப்பில் 70 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். படிப்பில் 4 ஆயிரம் மாணவர்களும் பயின்று வருகின்றனர் என்றார்.நிகழ் கல்வியாண்டு முதல் பி.எட். பட்டப் படிப்பிற்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, அதுகுறித்து தனியார் கல்லூரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பி.எட் பட்டப்படிப்பிற்கான கால அளவு அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி