கிராமிய வங்கி பணிக்கான IBPS தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டிர்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2015

கிராமிய வங்கி பணிக்கான IBPS தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டிர்களா?

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் உள்ள Regional Rural வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக IBPS எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த முழுமையான விவரங்கள் வருமாறு:

பணி: Office Assistant (Multipurpose)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale - I

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் கணினி குறித்தும் படித்திருக்க வேண்டும்.

பணி: Officer Scale - II (General Banking Officer)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economicsand Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Officer Scale - II (Specialist Officer)

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் Electronics, Communication, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA அல்லது MBA முடித்திருக்க வேண்டும் அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer Scale - III

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, AgriculturalEngineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economicsand Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக வங்கிபணியாளர் தேர்வாணையம் IBPS-ஆல் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். PPB-CWE-IV-2015 எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப்பின் நிரந்தர பணி வழங்கப்படும். நேர்முகத் தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுயகையெப்பமிடப்பட்ட நகல்கள்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பித்த பிரிண்ட அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்பிக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. இதனை கிரிடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம்ஆன்லைன் வழியில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்றஇணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் IBPS இணையத்தில்கொடுக்கப்பட்டுள்ள Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.07.2015

ஆன்லைன் தேர்வுக்கு உரிய Call Letter-ஐ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி: 19.08.2015 முதல்ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 2015

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: அக்டோபர் 2015

நேர்முகத்தேர்வுக்கு உரிய ்ழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி: நவம்பர் 2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர், டிசம்பர்-2015

தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் தேதி: ஜனவரி: 2016

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி