தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.இது குறித்து தமிழ்நாடு தட்டெழுத்து-கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சோம சங்கர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தட்டெழுத்துத் தேர்வினை நடத்துகிறது. 29-ம் தேதி (சனிக்கிழமை) தட்டெழுத்து இளநிலைத் தேர்வு நான்கு அணிகளும், 30-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐந்தாவது அணிக்கும் தேர்வு நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10.20 மணிக்கு தட்டெழுத்து முதுநிலைத் தேர்வுகள் தொடங்கி மூன்று அணிகளாக நடைபெறுகிறது.29-ம் தேதி தட்டெழுத்து ஆங்கிலம் உயர்வேகத் தேர்வு 10.20 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும், தட்டெழுத்து தமிழ் உயர்வேகத் தேர்வு நண்பகல் 12.10 மணிக்குத் தொடங்கி 12.20 வரையிலும் நடைபெறுகிறது.

மேலும் 30-ம் தேதி மாலை 3.50 முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 4.40 வரையிலும் புதுமுக தட்டெழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு அணிகளாக நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 98 மையங்களில் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி