டிப்ளமோ நர்சிங் படிப்பு 31 முதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2015

டிப்ளமோ நர்சிங் படிப்பு 31 முதல் கலந்தாய்வு

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 31ம் தேதி துவங்கும்' என,மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இதற்கு, 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 31ல் துவங்கி, செப்., 2ம் தேதி வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.


மாணவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன் கலந்தாய்வுக்கு, அசல் சான்றுகளுடன் வர வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhelth.org என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி