செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு

நிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில் உள்ள 2000 இடங்களுக்குகலந்தாய்வு நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதுவரை மூன்றரை ஆண்டுகளாகஇருந்த செவிலியர் பட்டயப் படிப்பின் படிப்புக் காலம், இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் "செயலாளர், தேர்வுக்குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு எடுக்கப்பட்ட வரைவோலையைச் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி