தமிழகத்தில் உள்ள 22 பல்கலைகளில், மதுரை காமராஜ், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர், நெல்லை மனோன்மணியம் சுந்தர னார், வேலுார் திருவள்ளுவர் பல்கலை உட்பட பல முக்கிய பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்., 8ல் துணைவேந்தர் கல்யாணியின் பதவிக்காலம் முடிந்தும், நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. காற்றில் பறக்கும் நடைமுறைகள் துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறை, எந்த பல்கலைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய கற்பககுமாரவேலுக்கு 2011ல் பதவி காலம் முடிந்தது. ஆனால், அதன்பின் ஓராண்டாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறையை அவர் உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் வந்த துணைவேந்தர் கல்யாணி ஓய்வுபெற்ற போதும், இதே நடைமுறையை தான் பின்பற்றியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் அவர்கள் மீண்டும் ஒருமுறை, அந்த பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தியது தான். அதற்கேற்ப மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு, கல்யாணி மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இதுதவிர வேறு பல்கலைகளின் முன்னாள் துணைவேந்தர்கள் குணசேகரன், மணிமேகலை, முத்துச்செழியன் உட்பட நான்கு பேர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 22 பல்கலைகளில், மதுரை காமராஜ், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர், நெல்லை மனோன்மணியம் சுந்தர னார், வேலுார் திருவள்ளுவர் பல்கலை உட்பட பல முக்கிய பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்., 8ல் துணைவேந்தர் கல்யாணியின் பதவிக்காலம் முடிந்தும், நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. காற்றில் பறக்கும் நடைமுறைகள் துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறை, எந்த பல்கலைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய கற்பககுமாரவேலுக்கு 2011ல் பதவி காலம் முடிந்தது. ஆனால், அதன்பின் ஓராண்டாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறையை அவர் உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் வந்த துணைவேந்தர் கல்யாணி ஓய்வுபெற்ற போதும், இதே நடைமுறையை தான் பின்பற்றியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் அவர்கள் மீண்டும் ஒருமுறை, அந்த பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தியது தான். அதற்கேற்ப மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு, கல்யாணி மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இதுதவிர வேறு பல்கலைகளின் முன்னாள் துணைவேந்தர்கள் குணசேகரன், மணிமேகலை, முத்துச்செழியன் உட்பட நான்கு பேர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர்.
Real article .....
ReplyDelete