10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.


இத்தேர்வில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இத்தேர்வு அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகர் கல்வி மாவட்டத்திற்கு கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்திற்கு சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும் செய்முறை தேர்வு மையங்களாகும். இம்மையங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த செய்முறை பயிற்சி முடித்தவர்களைமட்டுமே அனுமதித்து, செய்முறைத் தேர்வினை சுமூகமான முறையில் நடத்தி முடிக்கவேண்டும். அதேபோல், செய்முறை தேர்வு மதிப்பெண்களை பெற்று குறுந்தகடில் பதிவு செய்தும், மதிப்பெண் பட்டியலையும் நேர்முத உதவி அலுவலர்(இடைநிலை) அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரியில் வருகிற 25-ம் தேதிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கவும் அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி