12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனஇதில்,


தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சகோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கி, காப்பீடு, பொதுத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், மத்திய வர்த்தக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில், ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி