அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2 லட்சம் மாணவர்கள்: தமிழக அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2 லட்சம் மாணவர்கள்: தமிழக அரசு தகவல்

அரசுப் பள்ளிகளில் 11,992 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2.60 லட்சம் மாணவர்கள் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நர்சரிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்தது.இதையடுத்து, அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.


கடந்த மூன்று ஆண்டுகளில் 8,934 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2.1 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழிப் பிரிவுகளில் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 3,058 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 53,668 மாணவர்கள் படிப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3 comments:

  1. தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தினாலே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.அரசுப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவேண்டும்.

    ReplyDelete
  2. தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தினாலே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.அரசுப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி