தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் அக்.31-இல் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2015

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் அக்.31-இல் உண்ணாவிரதம்

தொழிற்கல்வி ஆசிரியர்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 31-ஆம் தேதி அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை:


கூட்டமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்குதல், பதவி உயர்வில்லா பணியிடங்களுக்கு தேர்வுநிலை தர ஊதியம் நிர்ணயித்து நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தக் கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 31-இல் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி