இனி, சிம்னி விளக்குக் கண்ணாடிகளை உடைத்துவிடாமல் துடைக்கத் தேவையில்லை. சீமத்தண்ணியால் நிரப்பி, திரிகளை சரி செய்யத் தேவை இல்லை. கிராமத்து தாய்மார்கள், மகிழ்ச்சியோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்தியில் வெளிச்சம் அவர்களுக்குப் புதிது.இனி, இரவிலும் தெருவிளக்கில் அமர்ந்து அரிசியில் கல்லு பொறுக்கலாம் - பாண்டி பல்லாங்குழி விளையாடலாம் என்று தாய்மார்களும்; தாயம் மங்காத்தா எப்பவும் விளையாடலாம் என்று சிலரும்; இனி கவளையக் கட்டிக்கிட்டு காலையில இருந்து அந்தி வரைக்கும் முன்னயும் பின்னயுமா போய் நீர் இறைக்கத் தேவை இல்லை - பொத்தானத் தட்டினா குழாயில தண்ணியா கொட்டுமாம் என்று விவசாயிகளும்; இனி வீட்டுப் பாடத்தை ராத்திரிகூட எழுதலாம் என்பதால் மாலையில் நிறைய விளையாடலாம் என்று பள்ளிக் குழந்தைகளும் ஏகத்துக்கும் மகிழ்ந்திருந்தார்கள்.முற்றாய் முடிக்கப்பட்டிருந்த தார்ச் சாலைகள், அந்தக் கிராமத்துக் குழந்தைகளைத் திக்குமுக்காட வைத்திருந்தன.
எண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம் கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள். சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம். இனிஅதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை, பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.
இனி, சிம்னி விளக்குக் கண்ணாடிகளை உடைத்துவிடாமல் துடைக்கத் தேவையில்லை. சீமத்தண்ணியால் நிரப்பி, திரிகளை சரி செய்யத் தேவை இல்லை. கிராமத்து தாய்மார்கள், மகிழ்ச்சியோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்தியில் வெளிச்சம் அவர்களுக்குப் புதிது.இனி, இரவிலும் தெருவிளக்கில் அமர்ந்து அரிசியில் கல்லு பொறுக்கலாம் - பாண்டி பல்லாங்குழி விளையாடலாம் என்று தாய்மார்களும்; தாயம் மங்காத்தா எப்பவும் விளையாடலாம் என்று சிலரும்; இனி கவளையக் கட்டிக்கிட்டு காலையில இருந்து அந்தி வரைக்கும் முன்னயும் பின்னயுமா போய் நீர் இறைக்கத் தேவை இல்லை - பொத்தானத் தட்டினா குழாயில தண்ணியா கொட்டுமாம் என்று விவசாயிகளும்; இனி வீட்டுப் பாடத்தை ராத்திரிகூட எழுதலாம் என்பதால் மாலையில் நிறைய விளையாடலாம் என்று பள்ளிக் குழந்தைகளும் ஏகத்துக்கும் மகிழ்ந்திருந்தார்கள்.முற்றாய் முடிக்கப்பட்டிருந்த தார்ச் சாலைகள், அந்தக் கிராமத்துக் குழந்தைகளைத் திக்குமுக்காட வைத்திருந்தன.
இனி, சிம்னி விளக்குக் கண்ணாடிகளை உடைத்துவிடாமல் துடைக்கத் தேவையில்லை. சீமத்தண்ணியால் நிரப்பி, திரிகளை சரி செய்யத் தேவை இல்லை. கிராமத்து தாய்மார்கள், மகிழ்ச்சியோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்தியில் வெளிச்சம் அவர்களுக்குப் புதிது.இனி, இரவிலும் தெருவிளக்கில் அமர்ந்து அரிசியில் கல்லு பொறுக்கலாம் - பாண்டி பல்லாங்குழி விளையாடலாம் என்று தாய்மார்களும்; தாயம் மங்காத்தா எப்பவும் விளையாடலாம் என்று சிலரும்; இனி கவளையக் கட்டிக்கிட்டு காலையில இருந்து அந்தி வரைக்கும் முன்னயும் பின்னயுமா போய் நீர் இறைக்கத் தேவை இல்லை - பொத்தானத் தட்டினா குழாயில தண்ணியா கொட்டுமாம் என்று விவசாயிகளும்; இனி வீட்டுப் பாடத்தை ராத்திரிகூட எழுதலாம் என்பதால் மாலையில் நிறைய விளையாடலாம் என்று பள்ளிக் குழந்தைகளும் ஏகத்துக்கும் மகிழ்ந்திருந்தார்கள்.முற்றாய் முடிக்கப்பட்டிருந்த தார்ச் சாலைகள், அந்தக் கிராமத்துக் குழந்தைகளைத் திக்குமுக்காட வைத்திருந்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி