தமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

தமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் அரசு பிறப்பித்த இருவேறு ஆணைகளின் காரணமாக சிக்கல் நிலவுகிறது.
}!--more-->

1984-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையில் இந்த பதவிகளுக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் 1990-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு ஆணையில் கலப்பு திருமணம் செய்தோர் மற்றும் விதவைகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் காலிஇடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே பதவிகளை நிரப்ப வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதில் தீர்ப்பு வழங்கப்படாததையடுத்து கலப்பு திருமணம் செய்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் 2 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால் அது பின்பற்றபடாததால் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர்.


இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி