“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு

பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI கருத்துகேட்டிருந்தது.


பேசும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்கு தொலைபேசி நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என பொதுமக்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து TRAIக்கு தொலைபேசி நிறுவனங்களின் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.பேசும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்பட்டால், அந்த அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற யோசனையையும் நிராகரிப்பதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு கருத்துக்களையும் பரிசீலித்து இதுதொடர்பான உத்தரவைTRAI வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி