ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்தீர்மானம்

மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.சேலத்தில் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஏ.விஜய்குமார் தலைமை வகித்தார்.


பொதுச் செயலர் எல்.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சேலம் மாவட்டத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலர் எல்.ரவீந்திரன் கூறியது:நீதிமன்ற தீர்ப்புகளின்படி மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதவி உயர்வில் 3 சத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை அனைத்துத் துறை பயன்பாடுகளுக்கும் ஏற்கத்தக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் பயணப்படி ரூ.1,000-ஐ பிடித்தமின்றி அனைத்து நாள்களுக்கும் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.ஆளுமைத் திறன், கற்றல், கற்பித்தல் திறன் பயன்பாட்டு வளர்ச்சிக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு மடிக் கணினி வழங்கி, சிறப்புப் பயிற்சி அளிக்கவேண்டும். பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி