கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்!

வால்பாறையில் அடிக்கும் குளிரிலும், கொளுத்தும் வெயிலிலும், கடுங்குளிரிலும் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல், மழைக்கு கூட பள்ளி அருகில் ஒதுங்காத ஆதிவாசி மாணவர்கள், இன்று அரசு உயர்பதவி வகித்து, எங்களாலும் சாதிக்க முடியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.


கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் காடம்பாறை, கருமுட்டி,மாவடப்பு, ஈத்தக்குழி, பரமன்கடவு, சங்கரன்குடி, வில்லோனி நெடுங்குன்று, கல்லார் உள்ளிட்ட பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வனப்பகுதியில் வசித்து வருகின்றனர்.பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று தெரியாமல், வனப்பகுதிக்குள்ளேயே தங்களது வாழ்க்கையை தொடர்ந்தனர். இவர்கள் தற்போது, கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசும் ஆதிவாசி மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில், வால்பாறை கக்கன்காலனியில் நடத்தி வரும் அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளயில், பல்வேறு செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த, 63 மாணவர்கள் படிக்கின்றனர்.ஆரம்பத்தில் பள்ளி செல்ல தயக்கம் காட்டிய மாணவர்களை, இந்தப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களுடன் நண்பனாக பழகி, அவர்களை அரவணைத்து நாள்முழுவதும் மாணவர்களுடன் இருந்து வழி நடத்தினர். தற்போது ஆதிவாசி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வித்தரமும் வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. இவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியும், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் கணினி மூலம் ஆங்கிலவழிக்கல்வியும் கற்றுத் தரப்படுகிறது.பள்ளித்தலைமை ஆசிரியர் ராஜகோபால் கூறியதாவது, ஆதிவாசி மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்திறமை உள்ளது. பாடத்தை ஒரு முறை நடத்தினாலே போதும் எளிதில் புரியும் தன்மை கொண்ட மாணவர்கள் இவர்கள்.


மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர ஆசிரியர்கள் அவர்களுக்கு எளிதில் புரியும் விதம் திறம்பட பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் எளிமை, அமைதியானபேச்சு, தெளிவான முடிவு ஆகியவை அவர்களை வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்றால், அதில் ஆசிரியர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது, இவ்வாறு ராஜகோபால் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி