மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி

பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும் கல்வித்தரத்தை ஆய்வு செய்வது எப்படிஎன்பது குறித்து, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு பெற உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.


வரும், 4ம் தேதி முதல், 29ம்தேதி வரை, சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது.மாவட்ட கல்வி அதிகாரிகளாக பொறுப்பேற்ற பின், பள்ளிகளில் ஆய்வு செய்வது; ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பிக்கும் திறனை சோதனை செய்வது; மாணவர்களின் கல்வித்தரத்தை சோதித்தல் மற்றும் நிர்வாக பணிகளை பிரச்னையின்றி கையாளுவது; அதிகாரி, ஊடகவியலாளர், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை ஆகியவை குறித்து, இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி