TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" என்ற சுய விவர பக்கம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பொறுப்பிலுள்ள பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:


டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" அமல்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும்காலதாமத்தை தவிர்க்க முடியும். ஏன் என்றால் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சான்றிதழ்களை அவர்களே பதிவேற்றம்(upload) செய்துவிடாலாம். இதனால் அவர்களைமீண்டும் அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் வேலை எங்களுக்கு இல்லை.இரண்டாவது ஆன்லைன் விண்ணப்பத்தில்(application) ஒரு தகவல்களை சொல்லிவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் போது மற்றொன்றை எடுத்துவருவார்கள். எனவே அதில் ஏற்படும் தவறுகள் எல்லாம் தவிர்க்கப்படும்.மூன்றாவதாக இலவசமாக கொடுக்கக்கூடிய(free chance) வாய்ப்புகளை கண்டறியமுடியும்.


உதாரணமாக முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு இலவச வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்கு மேற்பட்டு அந்த இலவச வாய்ப்புகளை தவறுதலாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு இது பயன்படும்.நான்காவதாக ஒரு தேர்வுக்கு இரண்டு அப்ளிகேசன் போடுவது தவிர்க்கப்பபடும். உதாரணமாக குரூப்1 குரூப்2 தேர்வினை எடுத்துக்கொண்டோமானால், விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிப்பது. ஒன்று கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பது, மற்றொரு விண்ணப்பத்தில் கட்டணம் கட்டாமல் விண்ணப்பிப்பது, உள்ளிட்ட தவறுகள் தவிர்க்கப்படும் என்றார்.விண்ணப்பதாரர் சுய விவர பக்கம் ("candidate's dash board") அடுத்த 10 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை பதிவேற்றம்(upload) செய்து கொள்ளலாம் என்றார்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி