TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்

தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.


சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு நடைமுறையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்து, 149 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின், 'கீ' விடைத்தாள் ஒரு வாரத்திலும், தேர்வு முடிவு ஒரு வாரத்திலும் வெளியாகும்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பிட்ட அளவு தேர்வு கட்டண சலுகை உள்ளது. பட்டியலினத்தவருக்கு முழுவதும் சலுகை உள்ளது. இந்தசலுகை தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் விவரங்களில், சில நேரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வர்கள் ஒருமுறை பதிவில் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) அளித்துள்ள கல்வித் தகுதி விவரங்கள், தேர்வு முடிவின் போது, சான்றிதழ் சரிபார்ப்பில் மாறுதலாக உள்ளது.


இதைத் தடுக்க, 'டேஷ் போர்ட்' என்ற புதிய முறை விரைவில் அறிமுகமாகும். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் சுயவிவரப் பக்கம் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களின் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை, 'அப்டேட்' செய்யலாம். இந்தத் தகவல் அடிப்படையில், தேர்வர்களின் கட்டண சலுகை குளறுபடியின்றி கணக்கிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி