அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் ஹெல்த் திட்டத்தில் மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்தனர்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோய் பாதிப்பு, சத்து குறைபாடு களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசு சார்பில் ஸ்கூல் ஹெல்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


இத்திட்டம் அந்தந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநரின் கீழ் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோய் கண்டறியும் சோதனை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.மாணவர்களுக்கு நோய் கண்டறியும் சோதனையில் ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு பெண், ஆண் மருத்துவர், தலா ஒரு செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீசன் ஆகியோர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில், ரத்த சோகை, பற்கள், கண் பார்வை பிரச்னை, தொற்று நோய் குறித்து சோதனை செய்கின்றனர். ஒரு சில மாணவர்களுக்கு நோயின் தன்மை அதிகமாக இருப்பின், அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில், அனைத்து துறை சார்ந்த மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில்: அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு பற்கள் பாதுகாப்பு, உணவு அருந்து வதற்கு முன் கைகளை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கடந்த மூன்று மாதத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி