ஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2015

ஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கப் படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்தஆண்டு முதல் புதிய அரசு ஐடிஐ தொடங்கப்பட உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இந்த ஐடிஐ செயல்படும்.2 ஆண்டு பயிற்சியான ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், கம்மியர், மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகளுக்கு 14 முதல் 40 வயது வரை ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணம்இல்லை. மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும்.இங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவி களுக்கு அரசால் வழங்கப்படும் லேப்டாப் கணினி, சைக்கிள், புத்தகங்கள், வரை படக் கருவி, சீருடைகள், காலணி ஆகிய வை விலையில்லாமல் வழங்கப்படும்.


விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், சென்னை நடுநிலைப் பள்ளி, இருசப்பன் வீதி, புதுவண்ணாரப்பேட்டை அல்லது துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், வட சென்னை ஆகிய முகவரிக்கு நவம்பர் 11-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி