2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி

போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி:


பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், கடந்தாண்டு போட்டித்தேர்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதில் 11 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, குரூப்-1, குரூப் 2 தேர்வுக்கு அதிகளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக 2000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதேபோல், சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 1 போட்டித்தேர்வுக்கு 350 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி