மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் எனமத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல்அளித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2013 -ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்ய கூடாது என பிரதமரைத் தாம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.ஆனால் தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்து வரும் நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக பொதுத் தேர்வில் சிறப்பாகசெயல்பட முடியாது என்பதால், இதனை ரத்து செய்ய 2005-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் கூறியுள்ளார்.மாணவர் சேர்க்கைக்கான கொள்கை முடிவில் மத்திய அரசு தலையிடுவது, மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Oct 8, 2015
Home
kalviseithi
மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி